கரோனா ஊரடங்கு நடவடிக்கையால் வேலையிழந்த பணியாளர் களின் பிஎப் பங்களிப்பு தொகையை அடுத்த ஆண்டு (2022) வரை மத்திய அரசு செலுத்தும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இபிஎப்ஓ-வில் பதிவு செய்த தொழில் நிறுவனங்களில் வேலை இழந்தவர்களின் பிஎப் தொகை பங்களிப்பு மற்றும் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு இரண்டையும் சேர்த்து மத்திய அரசு செலுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். அவர்கள் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்படும் வரை இந்த பங்களிப்பு தொடரும். அதிகபட்சம் அடுத்த ஆண்டு வரை இது வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2W5WiMx