ஹரியாணா விவசாயி ஒருவர் தனக்கு தவறுதலாக வழங்கப்பட்ட ரூ.53 ஆயிரம் இழப்பீட்டு தொகையை அரசுக்கு திருப்பித் தர 5 ஆண்டுகளாக அலைகிறார்.

ஹரியாணா மாநிலம், ஜிண்ட் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சுர்ஜாமால். அவரும் அவரது தம்பியும் இணைந்து விவசாயம் செய்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு பருத்தி சாகுபடி செய்திருந்தனர். பயிர் பூச்சிகளால் பாதிக்கப்பட்டதால் இருவரும் தனித்தனியாக இழப்பீடு கோரி மாநில அரசிடம் மனுக்களை அளித்தனர். அரசு விதிகளின்படி அவர்களுக்கு ரூ.16,550 இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Wl7AfD